Monday, May 15, 2006

புருஷ ஸூக்தத்தில் புண்ணாக்கு

தங்கமணியின் பதிவிலிட்ட (http://bhaarathi.net/ntmani/?p=215#comments)கருத்து பின்வருமாறு:

தங்கமணி,

புருஷ சூக்தம் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நூல் என்று சமுத்ரா கூறுவது ஆச்சரியமளிக்கிறது. உண்மையில் புருஷ சூக்தத்தில் உள்ள தாங்கள் குறிப்பிட்ட ஸ்லோகத்திற்கு தற்காலத்தில் நீங்கள் வழிமொழியும் வியாக்யானம்தான் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டது என்பதுகூட அவருக்குத் தெரியவில்லை.

மனு ஸ்ம்ருதியையோ, அல்லது புருஷ சூக்தத்தையோ நேரடியாகப் படிக்காமலும், ஹிந்து தத்துவ புத்தகங்களை படிப்பதற்கு முன்னால் அவை எந்த தளத்திலிருந்து படிக்கப்படவேண்டும் என்பது பற்றிய ஹிந்து மதப் பெரியவர்கள் கூறும் கருத்துக்கள் பற்றியோ எதுவும் தெரியாமல், ஒரு சார்பு கருத்துக்கள் கொண்டவர்களின் விளக்கத்தை நம்புவது தற்காலத்தில் தங்களை அறிவாளிகளாகக் காட்டிக்கொள்ள பெரும்பாலானோர் செய்யும் சமுதாய எடிகுவட். உங்களுக்கு இதை எழுதுவது அயற்சியாய் இருந்ததில் எனக்கு வியப்பில்லை.

ராமானுஜ தத்தாச்சாரியார் எழுதியதை சில நக்கீரன் பத்திரிக்கைகளில் படித்தேன். ஜாலியாக இருந்தது. நக்கீரன் படிப்பது விடலை பருவத்திற்கே ஒருவரை அழைத்து சென்றுவிடக்கூடிய அனுபவம். ஆனால் இப்போது வயசாகிவிட்டது. நக்கீரனையோ அதில் வரும் கதைகளையோ (ஹி…ஹி..) ரசிக்கமுடிவதில்லை. படிக்க வேண்டும் என்று தோன்றினால் சரோஜா தேவியின் கதைகளோடு நிறுத்திக் கொள்கிறேன்.
சரோஜா தேவி புத்தகங்களுக்கும் கீழான புத்தகங்களை படிக்க சற்று அயற்சியாயிருக்கிறது எனக்கும்.

இதுவரை இடப்பட்ட காமென்ட்களில் ரவி ஸ்ரீனிவாஸினுடைய கருத்து அவர் விஷயங்களை பற்றி ஓரளவு தெரிந்து, புரிந்து பதிலளித்திருக்கிறார் என்பதை தெளிவுபடுத்தியது.

4 Comments:

At November 24, 2006 1:10 AM, Blogger அரவிந்தன் நீலகண்டன் Said ...

வெளிப்படையாகவும் வித்தியாசமாகவும் சிந்திக்கிறீர்கள் வாழ்த்துக்கள்!

 
At November 25, 2006 10:29 PM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

3

 
At November 25, 2006 10:29 PM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

4

 
At November 25, 2006 10:29 PM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

4

 

Post a Comment

<< Home